கண்மூடி குழலூதும் கலிவரதா மாந்தர்க்கிம்
மண்ணதனில் உனையன்றி கதியேது? தேரோட்டித்
திண்டோளா நின்பாதம் பற்றுவோ ரகந்தனிலே
கொண்டாட்டம் தானே தினம்!
விரலொன்றில் மலைதூக்கி புவிகாத்த பூபதியே
வரமொன்றை வழங்கவா வரதா! - கூட்டை
மறந்தான்மா உனைத்தேடி பரிதவிக்கும் நேரத்தில்
பரந்தாமா எனைக் காக்கவா !
கோவிலுள் குடிகொண்ட கருவழகன் கண்ணனைத்
தாவியே வளைத்திடத் தோன்றுதே! தவிக்கும்
ஆவியை அணைத்திடுவாய் அச்சுதா னந்தனே
பாவியெனை பொருத் தருள்வாய்!
கரந்தூக்கி உனைத்தொழுதேன் கார்வண்ணக் கண்ணாமதி
மறந்தேநான் பிழைசெய்தின் பொறு - என்றும்
புறந்தள்ளி பாவியெனப் பகராமல் பரம்பொருளே
நரனென்னை காத்திடுவாய் நீ!
பற்றிட்டேன் உன்பாதம் பூவுலகில் எனக்கிங்கு
மற்றேதும் வேண்டாமே மாதவா - தாமதம்
சற்றேயும் செய்யாமல் எம்மின்னல் அகற்றிடவே
கொற்றாநீ வந்துடனே காப்பாய்!
சீர்நல்கும் திருவுள்ளத் திருத்தாயும் மாலுந்தன்
மார்பதனில் அருள்கின்றாள் அழகாக - மாந்தர்
பாரினிலே உன்பாதம் பற்றிற்றால் போதுமினி
ஓர்பிறவி வேண்டாமே எமக்கு.
கண்ணனவன் திருப்பாதம் பற்றிற்றால் போதுமுன
தெண்ணமும் ஈடேறும் மனமே - முன்செய்
பண்டைவினை தீர்த்திடுவான் பரமபத பரந்தாமன்
விண்டைநீ விடா திரு!
நாராயணா வென்றத் திருநாமம் நாமுரைத்தால்
தீராத நோயாவும் தீர்ப்பான் - மாந்தர்
கோராமல் தானுணர்ந்து வரந்தன்னை வழங்கிடுவான்
மாறாது அவன்பாதம் பற்று!
மண்ணதனில் உனையன்றி கதியேது? தேரோட்டித்
திண்டோளா நின்பாதம் பற்றுவோ ரகந்தனிலே
கொண்டாட்டம் தானே தினம்!
விரலொன்றில் மலைதூக்கி புவிகாத்த பூபதியே
வரமொன்றை வழங்கவா வரதா! - கூட்டை
மறந்தான்மா உனைத்தேடி பரிதவிக்கும் நேரத்தில்
பரந்தாமா எனைக் காக்கவா !
கோவிலுள் குடிகொண்ட கருவழகன் கண்ணனைத்
தாவியே வளைத்திடத் தோன்றுதே! தவிக்கும்
ஆவியை அணைத்திடுவாய் அச்சுதா னந்தனே
பாவியெனை பொருத் தருள்வாய்!
கரந்தூக்கி உனைத்தொழுதேன் கார்வண்ணக் கண்ணாமதி
மறந்தேநான் பிழைசெய்தின் பொறு - என்றும்
புறந்தள்ளி பாவியெனப் பகராமல் பரம்பொருளே
நரனென்னை காத்திடுவாய் நீ!
பற்றிட்டேன் உன்பாதம் பூவுலகில் எனக்கிங்கு
மற்றேதும் வேண்டாமே மாதவா - தாமதம்
சற்றேயும் செய்யாமல் எம்மின்னல் அகற்றிடவே
கொற்றாநீ வந்துடனே காப்பாய்!
சீர்நல்கும் திருவுள்ளத் திருத்தாயும் மாலுந்தன்
மார்பதனில் அருள்கின்றாள் அழகாக - மாந்தர்
பாரினிலே உன்பாதம் பற்றிற்றால் போதுமினி
ஓர்பிறவி வேண்டாமே எமக்கு.
கண்ணனவன் திருப்பாதம் பற்றிற்றால் போதுமுன
தெண்ணமும் ஈடேறும் மனமே - முன்செய்
பண்டைவினை தீர்த்திடுவான் பரமபத பரந்தாமன்
விண்டைநீ விடா திரு!
நாராயணா வென்றத் திருநாமம் நாமுரைத்தால்
தீராத நோயாவும் தீர்ப்பான் - மாந்தர்
கோராமல் தானுணர்ந்து வரந்தன்னை வழங்கிடுவான்
மாறாது அவன்பாதம் பற்று!