Tuesday 19 September 2017

விடை பெறுகிறேன்

2007 முதல் இந்த வலைப்பதிவில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறேன். எனக்கு இதனால் கிடைத்த நண்பர்கள் ஏராளம். விளையாட்டாக ஆரம்பித்த எனக்கு  நீங்கள் கொடுத்த ஆதரவும் உற்சாகமான வரவேற்பும் என்னை திக்குமுக்காட வைத்து விட்டன.

காலத்தின் சுழற்சியில் வந்து போவது பல. அதில் இந்த ப்ளாகரும் ஒன்றோ? பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இனி வரும் பதிவுகளை முகநூலில் பதிவிட முடிவு செய்துள்ளேன். என்னை எழுத தூண்டியது நீங்கள் கொடுத்த ஊக்கமும் தமிழின் மேல் எனது தீராத ஈடுபாடும் தான். தயவு செய்து முகநூலில் https://www.facebook.com/madrasthamizhan/ என்ற முகவரியில் 'Like' மற்றும் 'Follow ' பொத்தான்களை அழுத்திவிடுங்கள். இதை ஒரு முறை செய்தால் போதும். அதன் பின் புதிய பதிவுகள் உங்களுடைய முகநூலிலேயே நீங்கள் வாசிக்கலாம். இங்கிருந்து விடை பெறுகிறேன் நண்பர்களே! முகநூலில் சந்திப்போம்.