Tuesday 17 June 2008

மறதி திலகங்கள்

எல்லா தந்தைக்குலங்களும் கேட்க வேண்டிய சோகக்கதை இது!
பொதுவாகவே தங்கமணிகள் அனைவரும் தத்தம் ரங்கமணிகள் மேல் ஒரு புகார் கூறுவார்கள். அது என்னவென்றால், 'உலகில் உள்ள ரங்கமணிகள் அனைவரும் மறதி திலகங்கள்' என்பது தான்! இந்த பட்டியலில் நானும் ஒருவன் என்பதை பரிதாபத்துடன் கூறிக்கொள்கிறேன்.


விஷயம் ஒன்றும் இல்லை ஐயா. எனது நண்பன் தன் குழந்தைக்கு பிறந்த நாள் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். விழாவில் கேக் எல்லாம் வெட்டி சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்காக ஒரு பல்சுவை நிகழ்ச்சி இருந்தது. இதில் ஒவ்வொரு குழந்தையாக மேடை மேல் ஏறி தனக்கு தெரிந்த பாடலை பாடியோ அல்லது வாத்தியத்தை இசைத்தோ அரங்கேற்றி கொண்டிருந்தார்கள்.

இது போன்ற விழாக்களில் சில புதிய நண்பர்களின் சகவாசம் கிடைக்கும் அல்லவா? புதிதாக சந்திக்கும் நண்பர்களை நாமே வலிய சென்று அறிமுகப்படுத்தி கொள்ளலாம் என்று எனது நண்பன் (தாமு என்று வைத்துக்கொள்வோமே) கூறினேன். அவனும், "சரி வா. எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலரை உனக்கு முதலில் நான் அறிமுகப்படுத்துகிறேன்" என்று கூறினான்.

அதோடு மட்டும் நிறுத்திக்கொண்டிருக்கலாம். "இந்த தங்கமணிகளுக்கு எப்போது பார்த்தாலும் டீ.வீ. சீரியல்களை பற்றி பேசத்தான் நேரம் இருக்கும். புதிய நண்பர்கள் கிடைத்தால் கூட 'அவன் மனைவி பச்சை நிற மைசூர் சில்க் புடவை கட்டிக்கொண்டு வந்தா' என்று ஒரு மாதத்துக்கு பிறகு கூட ஞாபகம் வைத்துக்கொண்டிருப்பார்கள்" என்று கமெண்ட் ஒன்றை அடித்து விட்டான்.

அவன் எவ்வளவு பெரிய வம்பில் மாட்டிக்கொள்ள போகிறான் என்று அப்போது தெரியவில்லை.

தாமு ஒருவரிடம் சென்று, "வெங்கடேசன், என் நண்பனை சந்தித்தீர்களா?" என்று என்னை அறுமுகப்படுத்துவது போல பேச்சு கொடித்தான். தாமுவின் தங்கமணியும் வெங்கடேசனின் தங்கமணியும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நானும் வெங்கடேசனிடம் கை குலுக்கினேன். அவர் உடனே தாமுவிடம் "சார், நான் வெங்கடேசன் இல்லை. என் பெயர் கோவிந்தன்" என்று கூறினார்.

தாமுவின் முகம் என்னவோ போலாகிவிட்டது. ஒரு நிமிடம் அங்கு மயான அமைதி நிலவியது. நானாவது சும்மா இருந்திருக்க வேண்டும். என் நண்பனை நான் விட்டுக்கொடுக்க முடியாது அல்லவா? நிலைமையை எப்படியாவது சமாளிக்க வேண்டுமே!

உடனே நான் "கோவிந்தன் சார், உங்க பையன் ரொம்ப நல்லா புல்லாங்குழல் வாசிச்சான்" என்றேன்.
இப்போது என் தங்கமணி என்னை பார்த்து முறைத்தாள்.

'என்னடா, நான் ஏதாவது தப்பாக கூறிவிட்டேனா' என்று நான் நினைப்பதற்குள் கோவிந்தன் குரலை கனைத்துக்கொண்டே "சார், இப்போ வாசிச்சது என் பையன் இல்லை. எனக்கு பையனே கிடையாது. என் பொண்ணு இன்னும் வாசிக்கவே ஆரம்பிக்கல" என்றாரே பார்க்கலாம்!

பிறகு என்ன, எல்லா தங்கமணிகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்! கவுத்துட்டாங்கய்யா, கவுத்துட்டாங்கய்யா!

4 comments:

Anonymous said...

சரியான கூத்து! மிக இயல்பாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

Anonymous said...

நீங்களும இப்படி? அவ்வ்வ்வ்வ்வ்!!!

சின்னப் பையன் said...

:-)))))))))))))

நானானி said...

நல்லவேளை! புல்லாங்குழல் வாசித்தது உங்கள் பையன் இல்லை!!!
ரங்கமணி டின்னே கட்டியிருப்பார்கள்!
சுவவையான நிகழ்ச்சியை சுவைபட கூறியிருக்கிறீர்கள்!!!